கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு புதிய அமைப்பு!

கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமும், திறமையும் இருந்தாலும் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாத இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் சவுத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அஸோசியேஷன் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக…

கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமும், திறமையும் இருந்தாலும் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாத இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் சவுத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அஸோசியேஷன் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக மக்களால் விளையாடப்படும் மற்றும் விரும்பப்படும் விளையாட்டு கிரிக்கெட் போட்டி ஆனால், பலர் திறமை இருந்தும் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க முடியாமல் போகிறது. காரணம், இளம் வயதில் திறமையாக கிரிக்கெட் விளையாடும் பலருக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல வழி தெரியாததும், சரியான வழிகாட்டி இல்லாததும் தான்.

அந்த வகையில் கிரிக்கெட்டில் திறமை மிக்க இளைஞர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வதோடு திறமையாளர்களை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்கான தளமாக South India Schools Cricket Associations தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது.

பள்ளி காலத்திலேயே இளைஞர்களை ஊக்குவித்து கிரிக்கெட் உலகில் ஜொலிக்க வைக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவராக ஜான் அமலன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் பொதுச்செயலாளராக பிரதீப்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக ஜோஸ்வா எடிசன், பொருளாளராக குடந்தை அஷ்ரப் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

South India Schools Cricket Associations கௌரவத் தலைவராக சினேகா நாயரும், தமிழ்நாடு ஸ்கூல் கிரிக்கெட் பெடரேஷன் கௌரவத் தலைவராக அப்துல்கலாம் பேரனுமான ஏ.பி.ஜே.எம்.ஜே.ஷேக் சலீம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.