சென்னையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து
இன்று மதியம் 6,000 கன அடி உபரிநீர் திறக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் அதிகமான நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரியாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 2,944 நீர் இருப்பு உள்ளது. அதன் மொத்த உயரம் 24 அடியில் தற்போது 21.34 அடி நீர் இருப்பு உள்ளது.
மேலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 6,881 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும், தற்போது 3,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு
வரும் நிலையில், இன்று மதியம் 12.30 மணியளவில் 6,000 கன அடி நீர் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.