மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் சந்தித்து பேசினார்.
ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு ராஜமஹேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே, ராஜமஹேந்திரவரம் மத்திய சிறையில் வீர வெங்கட சத்யநாராயணா என்ற விசாரணைக் கைதி, டெங்கு பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதே கதியை, சந்திரபாபு நாயுடுவுக்கும் ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் அவரது மகனான நாரா லோகேஷ் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து நாரா லோகேஷ் முறையிட்டுள்ளார். மேலும், இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சரும் தெலங்கானா பாஜக தலைவருமான கிஷன் ரெட்டியும் உடனிருந்தார்.இச்சந்திப்பு குறித்து நாரா லோகேஷ் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள சிறையில் சந்திரபாபு அடைக்கப்பட்டிருப்பது குறித்தும், பழிவாங்கல் நடவடிக்கைக்காக ஆட்சியை தவறாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தேன்.” என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள, News7 Tamil – ன் WhatsApp Channel– ல் இணைய – க்ளிக் செய்யுங்கள்!