தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம்

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான கடல் பகுதிகளில் டிசம்பர் 5ம்…

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான கடல் பகுதிகளில் டிசம்பர் 5ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும்.

பிறகு, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ம் தேதியை ஒட்டி தமிழகம்-புதுவை கடலோரப் பகுதிகளின் அருகில் கரையை கடக்கும்.

சனிக்கிழமை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுப்பாட்டால் தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 4ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகவும் வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.