தமிழகத்தில் சேலம், நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேற்கு தொடர்சி மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் எந்த பகுதிகளிலும் மழை பதிவாகவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
நாளை (புதன்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் மிதமானமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.