தமிழ்நாட்டின் குடியரசு தின அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்ததற்கு திமுக மகளிரணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை அனுப்பியிருந்தது. எனினும், அலங்கார அணிவகுப்பிற்கு தமிழ்நாடு அரசின் ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் மத்திய அரசின் செயலுக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது எனவும் இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அவமதிப்பதாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
https://twitter.com/KanimozhiDMK/status/1482984778014294019
மேலும், இந்தியா வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது என சுட்டிக்காட்டியுள்ள கனிமொழி , ஒன்றிய அரசு உடனடியாக ஜனநாயகத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இதற்கு முன் மக்களவை சபாநாயகர், எம்.பி.கனிமொழியை இந்தியில் பேசச் சொல்லி கூறியப்போது அவர் அதை எதிர்த்து தமிழில் பேசிய வீடியோ வைரலானது. இதேபோல் பல சம்பவங்களுக்கு இவர் குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.







