விவசாயிகள் உடனான 10ம் கட்ட பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது மத்திய அரசு!

விவசாயிகள் உடனான 10ம் கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு மற்றும்…

விவசாயிகள் உடனான 10ம் கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் இடையே 9 கட்ட பேச்சுவார்த்தை இதுவரை நடைபெற்றுள்ளது.

இன்று 10ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை மத்திய அரசு நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. விக்யான் பவனில் நாளை மதியம் 2 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply