இந்தியா செய்திகள்

மணீஷ் சிசோடியாவின் செயலாளரிடம் சிபிஐ விசாரணை!

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் செயலாளர் தேவிந்தர் சர்மாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி கலால் கொள்கை வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கடந்த பிப். 26 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு மார்ச் 20-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து மணீஷ் சிசோடியா, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், மணீஷ் சிசோடியாவின் தனிச் செயலாளர் தேவிந்தர் சர்மாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேவிந்தர் சர்மா, மணீஷ் சிசோடியாவுக்காக சிம் கார்டு, போன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக மணீஷ் சிசோடியாவின் கைதுக்கு தேவிந்தர் சர்மா கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறையும் தேவிந்தர் சர்மாவிடம் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காங்கிரஸிற்குள் நுழையும் பிரசாந்த் கிஷோர்?

Arivazhagan Chinnasamy

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருபவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

EZHILARASAN D

சித்திரை திருவிழா: கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

EZHILARASAN D