கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் கபினி அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 5,400 கன அடியும் என மொத்தம் 10,400 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
திறக்கப்பட்ட தண்ணீர் தமிழ்நாடு – கர்நாடக எல்லையான பாலாறு வழியாக இன்று காலை மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து 2,376 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 89.36 அடியாகவும், நீர் இருப்பு 51.92 டி.எம்.சி, யாகவும் உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.







