தமிழ்த் திரைப்பட உலகில் பல்லாண்டுகளாகக் கர்நாடக இசையிலான பாடல்களைத் தருவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. கர்நாடக இசை என்றாலும், இனிய தமிழ் வார்த்தைகளால் மகுடம் சூடிய சில திரைப்படப் பாடல்கள் குறித்து தற்போது காணலாம்.
இசை, பாடல் வரிகள், படத்தொகுப்பு மற்றும் படமாக்கல் ஆகியவற்றில் சிறந்த அம்பிகாபதி திரைப்படத்தில் தமிழ் மொழியின் வளம், கர்நாடக இசை, செழுமையான பாடல் வரிகளால் வெளிப்பட்டது. ‘சிந்தனை செய் மனமே’பாடல் ஒருவகை என்றால், ‘வடிவேலும் மயிலும் துணை’ என்ற பாடலில் இடம்பெற்ற “தமிழ் மாலைதனை சூடுவார்” என்ற இறுதிச் சரணத்தை மூச்சுவிடாமல் பாடியிருப்பார் டிஎம்எஸ்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் மகன் அம்பிகாபதியின் காதலை மையப்படுத்தித் தயாரிக்கப்பட்டது அம்பிகாபதி திரைப்படம். இதில் இடம்பெற்ற கவிஞர் கு. மா. பாலசுப்ரமணியத்தின் கருத்தாழமிக்க‘மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு” என்ற பாடல் மனங்கொண்ட காதலின் பல்வேறு பரிணாமங்களைக் காட்டியது. முதலில் காதலர்கள் மனத்தை பரிமாறிக் கொள்வதாகவும், முடிவில் நீ வேறு, நான் வேறில்லை என்பதை இருவரும் ஒருசேரப் பாடுவது போல் வரிகள் அமைந்திருக்கும்.
கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் மகாகவி பாரதியின் பாடல்களுக்குக் கச்சிதமாக இசையமைத்திருப்பார் ஜி.ராமநாதன். ‘ஓடி விளையாடு பாப்பா’, ‘வந்தே மாதரம் என்போம்’, ‘வெள்ளி பனிமலையின் மீதுலவுவோம்’ உள்ளிட்ட பாடல்கள் நாட்டுப்பற்றை ஏற்படுத்தினால், ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ பாடல் மெல்லிய காதலுக்குப் புதிய பொருளைத் தந்தது.
திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெற்ற கே.பி.சுந்தராம்பாளின் பழம் நீயப்பா முதல், இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை, மற்றும் ஒருநாள் போதுமா?, பாட்டும் நானே பாவமும் நானே ஆகிய அத்தனை பாடல்களுமே பரவசமூட்டியிருக்கும்.