ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மலர்ந்த காதல்: வாடிவாசலில் திருமணம்

அலங்காநல்லூர் வாடிவாசலில் திருமணம் செய்து கொள்ள அரசு அனுமதிக்குமாறு காதலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. உலக தமிழர்கள் மற்றும்…

அலங்காநல்லூர் வாடிவாசலில் திருமணம் செய்து கொள்ள அரசு அனுமதிக்குமாறு காதலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. உலக தமிழர்கள் மற்றும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. பின் அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி மதுரையிலும், ஜல்லிக்கட்டு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மதுரையை சேர்ந்த வித்யாதரணி – கார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின் நாளடைவில்அது காதலாக மலர்ந்தது. 4ஆண்டுகள் காதலித்த இவர்கள், தற்போது அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். ஜனவரி 16 ஆம் தேதி மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள நிலையில், வாடிவாசலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply