39 C
Chennai
May 29, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் – இபிஎஸ்

தமிழ்நாடு முழுவதும் மழையின் காரணமாக சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக கனமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பாக வைக்காததால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அண்மைச் செய்தி: அம்பேத்கரின் சித்தாந்தத்தை பாஜகதான் முழுமையாக செயல்படுத்தி வருகிறது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக சேதமடைந்த பயிர்களை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading