திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்பு!

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்த் முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனையடுத்து திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கரூர், விராலிமலை, பெருந்​துறை, அம்​பாச​முத்​திரம் ஆகிய தொகுதிகளில் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், சி.விஜயபாஸ்கர், எஸ்​.ஜெயக்​கு​மார், இசக்கி சுப்பையா ஆகியோரின் வெற்றியை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டது.

இதனிடையே ஆதிமுக சார்பில் ஓட்டியிட்டு வெற்றிபெற்ற எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், சி.விஜயபாஸ்கர், எஸ்​.ஜெயக்​கு​மார், இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேரும் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் திருச்சி கிழக்கு உட்பட கரூர், விராலிமலை, பெருந்​துறை, அம்​பாச​முத்​திரம் ஆகிய 5 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்​நிலை​யில், தேர்​தல் வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்ள 5 தொகு​தி​களுக்​கும் இடைத் தேர்​தல் நடத்த தடை விதிக்​கு கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பாளை​யங்​கோட்​டையைச் சேர்ந்த வழக்​கறிஞர் கே.வெங்​க​டாஜலபதி பொதுநல வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்கு கடந்த ஜூலை 10-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்​பாக தேர்​தல் ஆணை​யம், மத்​திய அரசு, சட்​டப்​பேர​வைச் செயலர் மற்​றும் முதல்​வர் விஜய், எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், சி.​விஜய​பாஸ்​கர், ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா ஆகியோர் 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஜூலை 31-ஆம் தேதி ( இன்று) ஒத்திவைத்தனர்.

அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொது நீதிபதிகள், வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்​துறை, அம்​பாச​முத்​திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.