வாங்கி ஒரு வாரத்தில் பழுதான புதிய டிவி; ரூ.1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென ரிலையன்ஸ் ஷோரூம் மற்றும் பிலிப்ஸ் டிவி நிறுவனங்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென ரிலையன்ஸ் ஷோரூம் மற்றும் பிலிப்ஸ் டிவி நிறுவனங்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான கே.செல்வக்குமாரசாமி மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் உள்ள ரிலையன்ஸ் ஷோரூமில் 49 இன்ச் அளவிலான ஹெச்.டி. தரத்திலான பிலிப்ஸ் டிவியை கடந்த 2017ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். ஒரு வாரத்திலேயே டிவி பழுந்தானது குறித்து புகார் அளித்த நிலையில், அதை சரிசெய்தும் மீண்டும் பழுதானதால் நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.


இந்த வழக்கில் ரிலையன்ஸ் ஷோரும், பிலிப்ஸ் டிவி நிறுவனம், சர்விஸ் செய்யும்
சென் டெக் நிறுவனம் ஆகியவை எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து நுகர்வோர் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், மூவரும் சேர்ந்து
டிவியின் விலை 65 ஆயிரத்து 390 ரூபாய், நேர கிரயம், மன உளைச்சல்
ஆகியவற்றிற்கான இழப்பீடாக ஒரு லட்ச ரூபாய், வழக்கு செலவு தொகை 10 ஆயிரம் ரூபாய் என ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 390 ரூபாயை இரண்டு மாதங்களில்
புகார்தாரருக்கு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.