2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார்.
கடந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை, இந்தியாவை சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இருந்து 100-வது ஆண்டை நோக்கி அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்:
- கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும்.
- நாடு முழுவதும் டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.
- கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக கூடுதல் கல்வி தொலைக்காட்சிகள் தொடங்கப்படும்.
- தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி முறையை செயல்படுத்தும் திட்டத்தின்கீழ் புதிதாக 200 சேனல்கள் உருவாக்கப்படும்.
- தேசிய சுகாதார திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
- பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு.
- வீடில்லாத 18 லட்சம் பேருக்கு 2023ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும்.
- நீர்ப்பாசன திட்டங்களுக்காக ரூ.8.7 லட்சம் கோடி ஒதுக்கீடு.
- 3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ.60,000 கோடி ஒதுக்கீடு.
- வடகிழக்கு மாநிலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: