ஊழல் புகாரில் சிக்கி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்ட போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை தமிழக அரசு தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளது.
சென்னை எழிலக கட்டிடத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு போக்குவரத்து துறை துணை ஆணையராக நடராஜன் பணியாற்றி வந்தார். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. குறிப்பாக அவர் சார்ந்த அலுவலர்கள் பணி உயர்விற்கு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரது அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அதிரடி சோதனை நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது கணக்கில் வராத 35 லட்ச ரூபாய் ரொக்கப்பணமும், யார் யாரிடமிருந்து அவர் பணம் பெற்றார். அந்த பணத்தினை யார் யாருக்கெல்லாம் பிரித்து கொடுத்தார் போன்ற தகவல் அடங்கிய டைரியையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனையடுத்து துணை ஆணையர் நடராஜன், அவரது உதவியாளர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த விசாரணை ஒரு பக்கம் நடைபெற்று கொண்டிருந்த யாரும் எதிர்பாரதவிதமாக அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல், அதிரடியாக அவர் நெல்லைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. லஞ்ச வாங்கிய புகாரில் சிக்கியவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை நெல்லைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டது எந்த வகையில் நியாயம் என கேள்விகள் எழுந்தன.
இந்தநிலையில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை தமிழக அரசு சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து நடராஜன் மீதான வழக்கு தீவிரமடையும் எனத் தெரிகிறது. இதனால் அவரிடமிருந்து கைப்பற்றிய டைரியில் உள்ள பல முக்கிய புள்ளிகள் கலக்கத்தில் உள்ளதாக தெரிகிறது.