முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் – கொச்சியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது!

குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கொச்சியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி அருகே மங்காஃப் பகுதியில் உள்ள 7 அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வந்தனர்.  இந்நிலையில்  13ம் தேதி அதிகாலை 4 மணியளவில் அக்கட்டடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.  இந்த தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் பரவியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த  தீவிபத்தில் தற்போது வரை 43 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும்,  பலியானவர்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த பலர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.  இந்த தீவிபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் உடல் கேரள மாநிலம் கொச்சின் கொண்டு
வரப்படும் நிலையில் விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களை மீட்டு
உறவினர்களிடம் ஒப்படைக்க வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி
மஸ்தான் கொச்சின் சென்றடைந்தார்.  இதேபோல கேரள மாநில முதலமைச்சரான பினராயி விஜயனும் கொச்சி விமான நிலையம் சென்றார்.

இதனைத் தொடர்ந்து குவைத்திலிருந்து உயிரிழந்த இந்தியர்களின் உடல் விமான நிலையம் வந்தடைந்தது.  இதன் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சர் கீர்தி வர்தன் ,  வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் கேரள அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு உடல்கள் எடுத்து செல்லப்பட்டது.

தமிழ்நாட்டைச் சார்ந்த உயிரிழந்த 7பேரின் உடல்களும் தனித் தனி வாகனங்கள் மூலம் அவர்களது ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வேண்டும்: முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்!

EZHILARASAN D

காமன்வெல்த்-பளுதூக்குதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!

Web Editor

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading