நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் பாஜக தனித்து போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியமைத்து போட்டியிடும் என்ற எதிர்ப்பார்த்த நிலையில், பாஜக தனித்து போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “கூட்டணி பங்கீடு உடன்படிக்கை என்பது உள்ளாட்சித் தேர்தலில் மிக கடினமான ஒன்று. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாரதப்பிரதமர் எடுத்த முக்கியமான முடிவுகளுக்கு அதிமுக தலைவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார்கள். தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவரும் கட்சியாக உள்ளது. தொண்டர்களின் குரலுக்கு செவி சாய்க்கும் விதமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிடுகிறது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும், வீடு வீடாக கட்சியை எடுத்துச் செல்வதற்கும் பாஜகவிற்கு இது ஒரு வாய்ப்பு.
அதிமுக தலைவர்கள் மீது எந்த ஒரு வருத்தமும் கிடையாது. தனிப்பட்ட முறையில் நான் மிகவும் விரும்பும் தலைவர்கள் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக தலைவர்களை மிகுந்த மரியாதையோடு பார்க்கும் கட்சியாக பாரதிய ஜனதா உள்ளது. காலம் வரும் போது அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும். 2024 தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும். இல்லந்தோறும் தாமரையை கொண்டு சேர்க்கை இந்த முடிவை எடுத்துள்ளோம்” இவ்வாறு அவர் பேசினார்.