சேரன்மகாதேவி அருகே லோடு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது; சம்பவ இடத்திலேயே கூலி தொழிலாளி உயிரிழந்தார் .
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே புலவன் குடியிருப்பு பகுதியை
சேர்ந்தவர் வெள்ளையா மகன் தர்மராஜ் (வயது 55), கூலித் தொழிலாளியான இவர்
அப்பகுதியிலுள்ள பெந்தேகோஸ்தே சபை அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த லோடு ஆட்டோ தர்மராஜ் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து
சென்று தர்மராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் லோடு ஆட்டோ ஓட்டுநா் பிரவீன் (22) என்பவரை கைது செய்து விசாரித்து
வருகின்றனர்.
ரூபி.காமராஜ்







