தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு “ஊஞ்சல் இதழ்”, உயர் வகுப்பு மாணவர்களுக்கு “தேன் சிட்டு” இதழ், ஆசிரியர்களுக்கு “கனவு ஆசிரியர்” இதழை வெளியிட உத்தரவிட்டும், நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதமிருமுறை இந்த இதழ்கள் வெளிவரவுள்ளன. மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கவும், அவர்களின் படைப்பு திறன்களை
வெளிப்படுத்தும் வகையிலும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதம் இருமுறை தொடக்க
வகுப்பு மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழும், உயர்வகுப்பு மாணவர்களுக்கு தேன் சிட்டு
இதழும், ஆசிரியர்களுக்கான படைப்புத் தளத்தை உருவாக்க மாதந்தோறும் கனவு
ஆசிரியர் இதழ் வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ்
பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார்.
அதனை செயல்படுத்தும் வகையில், சிறார் பருவ இதழ்கள் அனைத்து வகையான அரசு
பள்ளிகளிலும், அனைத்து வகுப்பறைகளுக்கும் தலா ஒரு பிரதி வீதம் ஆண்டு விடுமுறை,
பருவ விடுமுறை நீங்களாக மாதம் இருமுறை என ஒரு கல்வி ஆண்டிற்கு 20 இதழ்களையும்,
ஆசிரியர்களுக்கான மாத இதழை ஒவ்வொரு பள்ளி நூலகத்திற்கும் ஒரு கல்வி ஆண்டிற்கு
10 இதழ்கள் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வாயிலாக
அச்சிட்டு நேரடியாக வாயிலாக அச்சிட்டு நேரடியாக பள்ளிகளுக்கு சென்று வழங்கப்பட
உள்ளதோடு, நடப்பு கல்வியாண்டில் திட்டத்தை நடைமுறைப்படுத்த ரூ.7.15 கோடி நிதி
விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-மணிகண்டன்








