30 ஆண்டுகளுக்கு முன்பே கமல்ஹாசனை வைத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவது குறித்து மணிரத்னம் கமல்ஹாசனிடம் பேசியுள்ளார்.
தமிழ் எழுத்தாளர் கல்கியின் உலக புகழ் பெற்ற வரலாற்று சரித்திர நாவல்தான் பொன்னியின் செல்வன். இத்தனை ஆண்டுகள் எழுத்துக்களின் மூலம், கதை வடிவத்தில் மட்டுமே மக்களின் மனதை ஆண்டு வந்தது. இக்கதையில் வரும் கதாபாத்திரங்களை ஒரு கற்பனை உருவமாக மட்டுமே உலக மக்கள் சித்தரித்து ரசித்து வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொன்னியின் செல்வன் கதையை எப்படியாவது திரைப்படமாக காட்சிப்படுத்த வேண்டும் என்று பல இயக்குனர்கள் முயன்றனர். எம்.ஜி .ஆரின் கனவுப் படமாக இந்த பொன்னியின் செல்வன் இருந்தது . இவ்வாறு பல ஆண்டு கனவை தற்போது இயக்குனர் மணிரத்னம் சாத்தியமாக்கியுள்ளார் . தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகவுள்ளது.
பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக இயக்க திட்டமிட்டிருந்த மணிரத்னம் 1980 களில் முதன் முதலில் இப்படத்தை இயக்குவதை குறித்து கமல்ஹாசனிடம் பேசியுள்ளார். பின்னர் இருவரும் இணைந்து இந்த புத்தகத்தின் 5 பாகங்களை படமாக இயக்க திட்டமிட்டு அதற்கான திரைக்கதை, லொகேஷன், 2 கோடி பட்ஜெட், ஒளிப்பதிவாளராக PC ஸ்ரீராம் மற்றும் இசையமைப்பாளராக இளையராஜா என அனைத்தையும் தீர்மானித்து படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளனர்.
ஆனால் கமல்ஹாசன் வைத்து இயக்க இருந்த பொன்னியின் செல்வன் சில காரணங்களால் திரைவடிவம் பெறாமல் போனது . தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியுள்ளார் .
1980களில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தைத் தயாரிப்பது குறித்து கமல்ஹாசன் வாரா இதழ் ஒன்றுக்கு 1980 இல் கமல்ஹாசன் அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் பங்கேற்கவுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.