கேரளத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு, ஓணம் பம்பர் லாட்டரி மூலம் ஞாயிற்றுக்கிழமை ரூ. 25 கோடி பரிசு கிடைத்துள்ளது.
திருவனந்தபுரம் அருகே ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப்
(30). இவர் நேற்று முன்தினம் மாலை திருவோண பம்பர் பரிசு சீட்டை பழவங்காடி
பகுதியில் உள்ள பகவதி லாட்டரி ஏஜென்சி கடையில் வாங்கியுள்ளார். அனூப் குடும்பம் வறுமை காரணமாக மலேசியாவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், மகனின் உண்டியல் பணம் ரூ. 500ஐ எடுத்து வந்து 25 கோடிக்கணக்கான மாநில அரசின் திருவோண பம்பர் பரிசு லாட்டரி சீட்டு எடுத்துச் சென்ற நிலையில் அனூப்புக்கு அடித்தது அதிர்ஷ்டம். அனூப் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை ரூ. 25 கோடி பரிசு கிடைத்துள்ளதாக அவரது கைப்பேசிக்கு மெசேஜ் வந்துள்ளது. இதனால், அனூப் வியப்பில் ஆழ்ந்துள்ளார். மொத்த பரிசுத் தொகையான ரூ. 25 கோடியில் வரிச் சலுகை போக ரூ. 15.75 கிடைக்கும் என லாட்டரி நிர்வாகம் தெரிவித்துள்ளன.