குழந்தையை அடித்துக் கொன்றுவிட்டு தவறி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடிய சித்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் அருகே உள்ள சித்தேரிக்கரையைச் சேர்ந்தவர் ஷமிலுதீன். லாரி ஓட்டுநரான இவருக்கு நஸ்ரின் என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு நசிபா என்ற பெண் குழந்தை உண்டு. உடல்நலக்குறைவால் நஸ்ரின் இறந்துவிட்ட நிலையில், ஷமிலுதீன் இரண்டாவதாக அப்ஷானா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் மனைவி மூலமாக ஷமிலுதீனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தமக்கு குழந்தை பிறந்ததும், நசிபாவை, அப்ஷானா துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், குழந்தை நசிபா வீட்டில் தவறி விழுந்து இறந்துவிட்டதாகக் கூறி, இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அப்போது, இறந்த குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததைப் பார்த்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அப்ஷானா, குழந்தையை அடித்து துன்புறுத்தியதுடன், கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அப்ஷானாவை போலீசார் கைது செய்தனர். குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று சித்தி நாடகமாடிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது