75வது சுதந்திர தினத்தையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்த வருடம் முழுவதும் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எற்பாடு செய்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து நாட்டின் 75 பகுதிகளில் 75 வாரங்களுக்கு இந்த கொண்டாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் தொடக்க நிகழ்ச்சியாக குஜராத் மாநிலம் சபர்மதி பகுதியில் இருந்து 21 நாட்கள் தண்டி பகுதிக்கு செல்லும் பாத யாத்திரையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்துவது, நாட்டில் உள்ள 75 கடற்கரைகளை சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக ஹர் ஹர் ட்ரையாங்கா என்ற நிகழ்ச்சிக்கும் மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஹர் ஹர் ட்ரையாங்கா என்பது ஒவ்வொரு வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுதல் என்பது பொருளாகும்.
இதையடுத்து வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் 75வது சுதந்திர தினத்தின் போது நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், இந்த ஆண்டு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாடும் போது ஹர் கர் திரங்கா இயக்கத்தை வலுப்படுத்து வேண்டும். ஆகஸ்ட் 13ந்தேதி முதல் 15ந்தேதி வரை மூவர்ணக் கொடியை ஏற்றவும் அல்லது உங்கள் வீடுகளில் காட்சிப்படுத்தவும். இந்த ஹர் ஹர் திரங்கா இயக்கம் தேசியக் கொடியுடனான நமது தொடர்பை ஆழப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.