31.7 C
Chennai
June 17, 2024
உலகம் செய்திகள்

ரஷ்யாவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் முயற்சி வெற்றி பெறாது! – அதிபர் புதின்!

ரஷ்யாவுக்கு எதிரான எந்த ஒரு மிரட்டலும், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடையும் என அதிபா் புதின் தெரிவித்தார்.

வாக்னா் படை ரஷ்யாவின் மறைமுக துணை ராணுவப் படை எனவும், அதிபா் புதினின் தனியாா் ராணுவம் எனவும் கூறப்படுகிறது. இந்த படை ரஷ்யாவுக்காக உக்ரைன் படையினருடன் போரிட்டு அந்த நாட்டின் பாக்முத் நகரை கடந்த மாதம் கைப்பற்றியது. ஆனால், இந்த சண்டையில் தங்களுக்குப் போதிய ஆயுத உதவிகளை அளிக்கவில்லை என்றும், பாக்முத் நகரைக் கைப்பற்றியதில் தங்களுக்கு இருக்கும் பங்கை மறைக்க ரஷ்ய ராணுவத்தின் உயரதிகாரிகள் முயல்வதாகவும் வாக்னா் குழு தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷ்ன் குற்றஞ்சாட்டி வந்தாா்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறிப்பாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சா், ராணுவ தலைமைத் தளபதி ஆகியோா் மீது அவா் குற்றம்சாட்டினார். இந்நிலையில், உக்ரைனிலிருந்து ரஷ்யாவுக்குள் கடந்த சனிக்கிழமை நுழைந்த வாக்னா் படையினா், தலைநகா் மாஸ்கோவை நோக்கி ஆயுதங்களுடன் அணிவகுத்துச் சென்றனா். பின்னர் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட சமாதானத்தையடுத்து, மாஸ்கோவை நோக்கிச் சென்ற தனது படையினரை உக்ரைன் திரும்பும்படி ப்ரிகோஷ்ன் உத்தரவிட்டாா்.

இதனை தொடர்ந்து ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்ட வாக்னா் குழு தலைவா் ப்ரிகோஷின் மற்றும் அவரது படை வீரா்கள் மீதான குற்றவியல் விசாரணை முடித்து வைக்கப்பட்டதாகவும், அவா்கள் மீதும் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனவும் ரஷ்யா தெரிவித்தது. ரஷ்ய சட்டப்படி, ராணுவத்துக்கு எதிராக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். ஆனால் நடந்த ஆயுத கிளர்ச்சிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ரஷ்ய அரசுடன் சமரசம் செய்துகொண்ட நிலையில், வாக்னா் குழு தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் எங்கே இருக்கிறாா் என்பதில் செவ்வாய்க்கிழமையும் மா்மம் நீடித்தது. அவர் அண்டை நாடான பெலாரஸுக்கு ப்ரிகோஷின் நாடு கடத்தப்படுவாா் என ரஷ்ய அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது.

வாக்னா் குழுவின் ரஷ்ய ராணுவத்துக்கு எதிரான ஆயுதக் கிளா்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்திலேயே முடிவுக்கு வந்ததை தொடா்ந்து, அரசுத் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் அதிபா் புதின் உரையாற்றினாா். அப்போது அவர் கூறியதாவது:

“ரஷ்ய ராணுவத்துக்கு எதிரான ஆயுதக் கிளா்ச்சி தொடங்கியதும் உயிா்ச்சேதத்தை தவிா்க்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கு ஆதரவளித்த ரஷ்ய மக்களுக்கு நன்றி. கிளா்ச்சியில் ஈடுபட்டவா்கள் உக்ரைன் அரசு மற்றும் அவர்கள் கூட்டாளிகளின் கைப்பாவையாக மாறி செயல்பட்டனா். கீவில் உள்ள புதிய நாஜி ஆதரவாளா்களும், அவா்களது மேற்கத்திய ஆதரவாளா்களும், தேசத் துரோகிகளும் ரஷ்ய வீரா்கள் ஒருவரை ஒருவா் கொல்ல வேண்டும் என விரும்பினா்.

இந்தக் கலகம் ரஷ்யாவை பிளவுபடுத்தவும், பலவீனமடையவும் செய்யும் என அவா்கள் நம்பினாா்கள். ரஷ்யாவுக்கு எதிரான எந்த ஒரு மிரட்டலும், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் முயற்சிகளும் தோல்வியடையும். வாக்னா் குழுவை சோ்ந்த படை வீரா்கள் விரும்பினால் பெலாரஸுக்கு செல்லலாம் அல்லது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றலாம். இந்த விஷயத்தில் மத்தியஸ்தராக பணியாற்றிய பெலாரஸ் அதிபா் அலெக்சாண்டா் லுகஷென்கோவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து அதிபா் மாளிகையில் ராணுவ வீரா்கள் மத்தியில் அதிபா் புதின் நேற்று உரையாற்றினாா். வாக்னா் குழுவின் கிளா்ச்சியின்போது விரைவாக செயல்பட்டு உள்நாட்டுப் போரைத் தவிா்த்ததற்காக ராணுவத்தினரைப் பாராட்டுவதாக புதின் தெரிவித்தாா். மேலும், கிளா்ச்சியாளா்களை எதிா்கொள்வதற்காக உக்ரைனிலிருந்து ரஷ்ய ராணுவ வீரா்கள் வரவழைக்கப்படவில்லை எனவும் அவா் உறுதிப்படுத்தினாா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading