குன்னுார் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன்!

குன்னுாரில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நீலகிரி மாவட்டம் குன்னுார் ஓட்டுப்பட்டறை பகுதியிலுள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் கடந்த மாதம் 27-ம் தேதி  கொடியேற்றம் துவங்கியது.…

குன்னுாரில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் ஓட்டுப்பட்டறை பகுதியிலுள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் கடந்த மாதம் 27-ம் தேதி  கொடியேற்றம் துவங்கியது. இந்நிலையில் மே 8 ம் நாள்  முளைப்பாரி கங்கையை அடைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக கலந்து கொண்டனர்.

இக்கோயில் பூஜையில் கலந்துகொண்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை . இந்நிகழ்ச்சியில் ஆண்களும் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.  பின் பெண்கள் எடுத்து வந்த முளைப்பாரியை கிராம எல்லை பகுதியில் வைத்து கும்மி அடித்து பாடல்கள் பாடி அம்மனை வழிபட்டு சிறப்பித்தனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.