அருப்புக்கோட்டை ஸ்ரீஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அருப்புக்கோட்டை புளியம்பட்டி அருள்மிகு ஸ்ரீஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பங்குனி பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வான அக்னி சட்டி திருவிழா இன்று நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கடும் விரதம் இருந்து மேளதாளங்களுடன் கையில் அக்னி சட்டி ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்று கோவிலில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பின்னர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த ஆயிரங்கண் மாரியம்மனை வழிபட்டனர்.மேலும் ஊர்வலமாக எடுத்து வந்த மாலைகளை பக்தர்கள் அம்மனுக்கு சாட்டினார். இவ் விழாவில் புளியம்பட்டி, வேலாயுதபுரம், திருநகரம், வெள்ளக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
—–கோ. சிவசங்கரன்







