அருண் விஜய் எப்படிபட்ட நடிகர் என்பதை நாம் யாரும் இங்கு சொல்லவேண்டியது அல்ல. அவரே ஒவ்வொரு படுத்திலும் சொல்லி வருகிறார்.
நடிகர் விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் குமரவேல் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்து உருவாகியுள்ள படம் சினம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சினம் படத்தின் தயாரிப்பாளர் விஜயகுமார், இயக்குநர் குமரவேல், நடிகர் அருண் விஜய், நடிகை பலக் லால்வானி, இசையமைப்பாளர் சபிர், பாடலாசிரியர் கார்கி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகர்கள் பிரசன்னா, சாந்தனு, இயக்குனர் ஹரி மற்றும் மகிழ் திருமேனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக அருண் விஜய், இப்படத்தில் தனது சொந்த குரலில் பாடிய பாடலை மேடையில் பாடினார். அதன் பின்னர் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் இசை வெளியீடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து “இயக்குனர் மகிழ் திருமேனி பேசுகையில், அருண் விஜய் எப்படிபட்ட நடிகர் என்பதை நாம் யாரும் இங்கு சொல்லவேண்டியது அல்ல. அவரே ஒவ்வொரு படுத்திலும் சொல்லி வருகிறார். எந்த வித கதாப்பாத்திரத்தை கொடுத்தாலும் அதனை கட்சிதமாக செய்கிறார். விஜயகுமார் மற்றும் அவரது மனைவி எனது பெற்றோர் போல உள்ளார்கள், அவர்களது குடும்பத்தில் ஒருவராய் தான் என்னை பார்க்கிறார்கள். அருண் விஜய் என் வீட்டு பையன் போல, அவனது அடுத்தடுத்து வளர்ச்சியையும் பார்த்து பெருமை படுகிறேன்” என பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்