“ப்ராங்க் வீடியோ” எடுத்து வெளியிட்டு வரும் “கோவை 360” யூடியூப் சேனல் மீது கோவை மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், உத்திரவின் பேரில் கோவையில் ப்ராங்க் விடியோ என்ற பெயரில் பெண்கள் மற்றும் முதியோர்களது சம்மதம் ஏதும் இன்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு அவர்களை மனரீதியாகவும் , உடல்ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில் , வீடியோக்கள் எடுப்பவர்கள் குறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலைய போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் , ” கோவை 360 டிகிரி ” என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர்கள் “ப்ராங்க் விடியோ” என்ற பெயரில் பொதுமக்களின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் , உடல்ரிதியாகவும் , மனரீதியாக துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டு அதை வீடியோ எடுத்து ” கோவை 360 டிகிரி ” என்ற யூடியூப் சேனலில் வீடியா வெளியிட்டது கண்டறியபட்டுள்ளது.
அதன்பேரில் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார், கோவை 360 டிகிரி என்ற யூடியூப் சேனல மீது 354D IPC & 4 of TNPHW Act r / w 66E IT Act ன் படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ப்ராங்க் விடியோ தொடர்பாக தேவையின்றி பொதுமக்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.







