புதுச்சேரியில் பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்று 3 நாட்கள் நடைபெறும் கலைவிழாவை புதுச்சேரி ஆளுநர் மற்றும் முதல்வர் துவங்கி வைத்தனர்.
புதுச்சேரியில் சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசு,
கலை மற்றும் பண்பாட்டுத்துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் இணைந்து 3 நாட்கள் நடைபெறும் கலைநிகழ்ச்சியை புதுச்சேரி கலை விழா புதுச்சேரி கடற்கரைச் சாலை, காந்தி திடலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் முரசு கொட்டி விழாவினைத் தொடங்கி வைத்தார்கள்.
இந்த விழாவில் பேசிய முதல்வர், ரங்கசாமி கலைஞர்களை ஊக்குவிக்க கலைமாமணி விருது வழங்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதே போல் மக்களை மகிழ்விக்கும் ஏழ்மை நிலையில் உள்ள கலைக்குழுவினர்களை கெளரவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் நாட்டில் சுற்றுலாவினர்களை அதிகம் ஈர்க்கும் முதன்மை மாநிலமாக புதுச்சேரி திகழ்வதாக பெருமிதம் கொண்டார்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனைதொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தாலாட்டு முதல் ஒப்பாரி வரை வாழ்க்கை என்றாலே கலை தான். வாழ்க்கை பாட்டில் ஆரம்பித்து பாட்டில் முடிகிறது. குழந்தைக்கு ஏன் தாலாட்டு பாடப்படுகிறது. அழும் குழந்தையை அமைதிப்படுத்த தாலாட்டு இசையால் தான் முடியும் என்றார் நோய்களுக்கு கூட இசை மருந்தாக இருக்கிறது. அறுவை சிகிச்சை நடக்கும் பொழுதும் நடந்து முடிந்த பிறகும் நோயாளிகளுக்கு இசை ஒளிபரப்பப்படுகிறது. இதன்மூலம் நோயாளிகள் இயல்பு நிலைக்கு திரும்புவது விரைவாக நடைபெறுகிறது. அறுவை சிகிச்சை மூலம் ஏற்படும் புண் இசையின் மூலமாக சீக்கிரம் குணமாகிறது என்று அமெரிக்க ஆராய்ச்சியில் கண்டறிந்து இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் இரத்த கொதிப்பு, தைராய்டு, ஆஸ்துமா போன்ற சிக்கலுக்கும் ஒரு ராகத்தின் மூலம் குணப்படுத்த முடியும் என்றார். இந்த விழாவில் பங்கேற்ற சில சிறுவர் சிறுமியர்கள் தேசியக்கொடியை உடையாக அணிந்து இருந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் தேசியக்கொடிக்கென்று ஒரு வரைமுறை உள்ளது சிறுவர்கள் என்பதால் பெரிது படுத்தவில்லை இனி இதை தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் கலைவிழாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த லாவனி ஆட்டம், கேரள
மாநிலத்தை சேர்ந்த கதக்களி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டியங்கள் பொதுமக்கள் மற்றும் புதுச்சேரிக்கு தொடர் விடுமுறையை கழிக்க குவிந்த ஏராளமான சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
ரூபி.காமராஜ்