கலை இழந்த காதலர் தின கொண்டாட்டம்; விவசாயிகள் ஏமாற்றம்!

காதலர் தினத்தை ஒட்டி ரோஜாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக குறைவான ஆர்டர்களே வந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு தங்கள் காதலை வெளிபடுத்த ரோஜா மலரையே மக்கள்…

காதலர் தினத்தை ஒட்டி ரோஜாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக குறைவான ஆர்டர்களே வந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு தங்கள் காதலை வெளிபடுத்த ரோஜா மலரையே மக்கள் பயன்படுத்துகின்றனர். காதலர் தினத்தின் ஒரு முக்கிய பங்காக விளங்கும் ரோஜா மலர் அன்பின் சின்னம் என்று கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாஜ்மஹால், நொப்ளஸ், பிங்க் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவை அனைத்தும் புத்தாண்டு மற்றும் காதலர் தினத்தை ஒட்டி மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா தாக்கத்தின் காரணமாக காதலர் தினத்தையொட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் ரோஜாக்களுக்கு குறைவான ஆர்டர்களே வந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply