எங்கள் போராட்டத்தில் எந்த கட்சிகளும் பங்கேற்கலாம்- மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா

எங்கள் போராட்டத்தில் காங்கிரஸ், பாஜக என எந்த கட்சிகளும் பங்கேற்கலாம். எங்களுக்கு எந்த கட்சியுடனும் தொடர்பு கிடையாது என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறியுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான…

எங்கள் போராட்டத்தில் காங்கிரஸ், பாஜக என எந்த கட்சிகளும் பங்கேற்கலாம். எங்களுக்கு எந்த கட்சியுடனும் தொடர்பு கிடையாது என மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறியுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கால் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகுவதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டிய இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுட்டனர்.

3 நாள் நீடித்த போராட்டத்தை பேச்சுவார்த்தையில் முடிவுக்கு கொண்டு வந்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை  அமைத்தார். விசாரணை முடியும் வரை தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷனை தலைவர் பதவியிலிருந்து நீக்கவும் உத்தரவிட்டார்.

தனது மீதான புகார்களை திட்டவட்டமாக மறுத்த பிரிஜ் பூஷன் தலைவர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்று கூறினார். இதற்கிடையே, பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளிடம் விசாரணை நடத்திய 7 பேர் குழு விசாரணை அறிக்கையை சமீபத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கை விவரத்தை விளையாட்டு அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இன்னும் எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மலியுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று முதல் போராட்டத்தில் குதித்தனர். நேற்று தொடங்கிய போராட்டம் இரவிலும் நீடித்தது. தொடர்ந்து இன்றும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தங்கள் போராட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் ஆதரவு தரலாம் என்று வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக காமல்வெல்த் மற்றும் ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை வினிஷ் போகத் கூறுகையில், நாங்கள் கடந்த 3 மாதங்களாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் விசாரணை குழுவை தொடர்பு கொள்ள முயன்றும் அது முடியவில்லை. நாங்கள் நாட்டிற்காக பதக்கம் வென்றுள்ளோம். எங்கள் வாழ்க்கையை அதற்காக பணயம் வைத்துள்ளோம். ஆனால் பாலியல் துன்புறுத்துதல் வழக்கில் இதுவரை எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. நீதிக்கிடைக்கும் வரை இரவு, பகலாக எங்கள் போராட்டம் தொடரும் ‘ என்றார்.

அதேபோல், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா கூறுகையில், இந்த முறை எங்கள் போராட்டத்தில் காங்கிரஸ், பாஜக என எந்த கட்சிகளும் பங்கேற்கலாம். எங்களுக்கு எந்த கட்சியுடனும் தொடர்பு கிடையாது’ என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.