சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாள் இன்று (ஜூன் 26) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி இன்று சென்னை காமராஜர் சாலையில் ‘ஸ்டார்ட் ரன்… ஸ்டாப் டிரக்ஸ்’ என்ற பெயரில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார். அவருடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த் மற்றும் தலைமை செயலாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் இந்த ஓட்டப்பந்தயத்தில் விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




