அன்னபூரணி அம்மாவின் அவதார திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் கிராமம் அருகே ஆசிரமம் கட்டி வரும் பெண் சாமியார் அன்னபூரணிக்கு இன்று அவதார விழா கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவமனையில் முடியாத நோய்களுக்குத் தீர்வு அளிப்பதாகவும் நொடி வாழ்க்கையைக் கொண்டாட்டமாக வாழ வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். அப்போது பெண் சாமியார் அன்னபூரணிக்குப் பொதுமக்கள் ஆர்த்தி எடுத்து காலில் விழுந்து ஆசி பெற்றுச்சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘சினிமா பானியில் இருசக்கர வாகனத்தைத் திருடிய மர்ம நபர்’
மேலும் யாரோ ஒருவர் என்னைப் பற்றி யூடியூபில் கதை கதையாகத் தவறாக வெளியிடுகிறார் எனத் தெரிவித்த பெண் சாமியார் அன்னபூரணி, இனி என்னைப் பற்றி தவறாகச் சித்தரிக்கும் ஊடகங்களுக்கு நான் பேட்டி அளிக்க மாட்டேன் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.