டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை தமிழ்நாடு பாஜக மாநில
தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று காலை 7 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு பாஜகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் டெல்லி சென்ற அண்ணாமலை, அங்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை அண்ணாமலை சந்தித்தார். தமிழ்நாடு முழுவதும் வரும் ஜூலை மாதம் 28 ஆம் தேதி “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் இம்மாதம் 28-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வரை 168 நாட்களுக்கு அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்கவுள்ளார்.
ஜனவரி 11-ஆம் தேதி அன்று இந்த நடைபயணம் சென்னையில் முடிவடைகிறது. இந்த பயணத்த்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வர உள்ளார். அவருடன் பாஜகவின் தேசிய தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளும் நிலையில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை அண்ணாமலை இன்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் தமிழக அரசியல் சூழல் மற்றும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
5 நாள் பயணாமாக டெல்லி சென்று இருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு மத்திய மந்திரி அமித்ஷா, மத்திய அரசு வழக்கறிஞர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளை முடித்துக்கொண்டு நேற்று இரவு தான் சென்னை திரும்பினார். ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு திரும்பிய சில மணி நேரத்திலேயே பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா