மதிய உணவுக்கு பிறகு கழிவறைக்கு சென்ற அவர் அங்கு புகை பிடித்துள்ளார். மேலும் கழிவறை கதவையும் அவர் சேதப்படுத்தியுள்ளார். எச்சரிக்கை ஒலியை கேட்டு அங்கு சென்று சிப்பந்திகள் அவரை லைட்டருடன் கையும் களவுமாக பிடித்தனர். இதனைத்தொடர்ந்து அவர் விமான ஊழியர்களை தாக்கியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அனைத்து விமான ஊழியர்களும் அவரை கட்டுப்படுத்த முயன்றதாகவும், ஆனால் அது தோல்வியில் முடிந்ததாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லி வந்தவுடன் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த பயணி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






