இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது கணவர் ஊருக்குள் சென்ற நிலையில் தக்காளி வேண்டும் என அவரை தேடி சிலர் வந்ததாகவும், கணவர் இல்லை என தெரிவித்தவுடன் அவர்கள் சென்றுவிட்டதாக உயிரிழந்த ராஜசேகர ரெட்டி மனைவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பணம் வைத்துள்ளதை தெரிந்து முதியவரை கொலை செய்யும் நோக்கத்துடன் தோட்டத்திற்கு மர்ம கும்பல் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







