ஜெயலலிதா போன்ற தலைவர் என்று சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதா போன்ற தலைவர் என்று சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

ஜெயலலிதா போன்ற தலைவர் என்று சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகளிர் தின விழா கொண்டாடத் தகுதியுள்ள ஒரே கட்சி அதிமுக. மகளிருக்கான திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா மட்டுமே. அந்த திட்டங்களை எல்லாம் தற்போது திமுக நிறுத்தி வருகிறது. அதிமுக என்பது கண்ணாடி இல்லை கற்களை வீசினால்
உடைவதற்கு, அதிமுக என்பது ஒரு சமுத்திரம் அதில் கற்களை வீசினால் கற்கள் மட்டுமே காணாமல் செல்லும்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எழுச்சி ஏற்பட்டுள்ளதால் திமுக உள்ளிட்ட
அனைத்து கட்சிகளில் இருந்து விருப்பப்பட்டு சேர்கின்றனர். அதனை ஏற்றுக்கொள்ள
வேண்டிய பக்குவம் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இருக்க வேண்டும். அது
அண்ணமலைக்கு இருக்க வேண்டும். அசுர வேகத்தில் கட்சி வளர்வதால் அனைவரும் வந்து சேர்கின்றனர். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக் கூடாது.

இதையும் படிக்க: திரிபுரா முதல்வராக 2வது முறையாக பதவியேற்ற மாணிக் சாஹா!

வைத்தியலிங்கம் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தும் பொய். என்னை அமைச்சராக உருவாக்கியவர் ஜெயலலிதா. என் மகனை எம்.பி. ஆக்கியவுடன் என் அரசியல் வாழ்க்கை முடிந்தது என கூறினார்கள். இருப்பினும் மீண்டும் எனக்கு அமைச்சர் பதவியை ஜெயலலிதா வழங்கினார். இது தெரியாமல் அரைவேக்காடு தனமாக அவர் பேசுகிறார். அரசியல் ரீதியாக பேச வேண்டும் என்றால் அரசியல் ரீதியாக பேச வேண்டும். வைத்தியலிங்கம் என்னுடைய நல்ல நண்பர் அவர் இப்படி மாறியுள்ளார் வஞ்சத்தில் வீழ்ந்துள்ளார்.

பாஜகவினர் செய்யும் செயல்களை கட்சியின் தலைவர் தடுக்க வேண்டும். இதனை அதிமுக தொண்டர்கள் செய்ய கிளம்பினால் என்ன ஆகும். எங்கள் கட்சியில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள் கொதித்து எழுந்தால் என்ன ஆகும். எனவே, அவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

அண்ணாமலை எப்படி தலைவர் ஆனார் என்பதற்குள் செல்ல விரும்பவில்லை. ஜெயலலிதா போல தான் ஒரு தலைவர் என கூறாதீர்கள். அப்படி ஒரு தலைவர் இந்தியாவில் பிறக்கப் போவதே இல்லை. செஞ்சி கோட்டை ஏறுபவர் எல்லாம் ராஜா தேசிங் இல்லை. மீசை வைப்பவர் எல்லாம் கட்டபொம்மன் இல்லை. இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். தொண்டர்களிடம் உணர்ச்சிகள் இருக்கலாம். ஆனால், தலைவர்கள் அதனை கட்டுப்படுத்த வேண்டும். கூட்டணியைப் பொறுத்தவரை 2024 வரை தொடரும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.