ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஊடுருவல்கள் காரணமாக இந்தியத் தூதரக பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளின் ஊடுருவல் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில்,
கபுல் மற்றும் கந்தஹர் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியத் தூதரக ஊழியர்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் கந்தஹரில் தாலிபான்கள் அத்துமீறி ஊடுருவியுள்ளனர். எனவே, முன்னெச்சரிக்கையாக, இந்திய அரசு, கந்தஹர் பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட இந்திய தூதரக ஊழியர்களைச் சிறப்பு விமானம் மூலம் நேற்று மாலை வெளியேற்றியது.







