கத்தினா மட்டும் போதுங்க.. ரூ.30 ஆயிரம் சம்பளம்!

அமெரிக்காவை சேர்ந்த சிசிடிவி நிறுவனம் ஒன்று, அந்நிறுவனத்தில் கொள்ளை ,திருட்டு போன்று சந்தேகத்திற்கு இடமாக ஏதும் நடக்க நேர்ந்தால் அதனை கண்காணித்து கத்தினால் போதும் என்ற புதுவகையான வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. கேட்பதற்கு…

அமெரிக்காவை சேர்ந்த சிசிடிவி நிறுவனம் ஒன்று, அந்நிறுவனத்தில் கொள்ளை ,திருட்டு போன்று சந்தேகத்திற்கு இடமாக ஏதும் நடக்க நேர்ந்தால் அதனை கண்காணித்து கத்தினால் போதும் என்ற புதுவகையான வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இந்த புதுவகையான வேலைவாய்ப்பு அனைவரையும் ஈர்த்துள்ளது. வாஷிங்டனை தளமாகக் கொண்ட லைவ் ஐ கண்காணிப்பு நிறுவனம், கண்காணிப்பு கேமராக்களைப் பயன்படுத்தி அந்நிறுவனத்தை கண்காணிக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கு இடமாக ஆயுதக் கொள்ளையர்களால் திருட்டு ,கொள்ளை ஏதும் நடக்க நேர்ந்தால் இந்தியாவில் இருந்தபடியே அந்த ஆபரேட்டர் உடனடியாக கத்தி அங்கு அனைவரையும் அலெர்ட் செய்ய வேண்டும் என்பது இந்த வேலையின் முக்கிய அம்சமாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கான ஆட்களை தேர்ந்தெடுத்து வருகிறது அமெரிக்காவை சேர்ந்த சிசிடிவி நிறுவனம். கொள்ளையர்களால் ஏற்படும் திருட்டுகளை தவிர்க்கவும் , கடையை கண்காணிப்பதற்காகவும், கடையின் நிர்வாகிகளை நிர்வகிப்பதற்காகவும் இந்த ஆபரேட்டர் நியமிக்கப்படுகிறார் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த வேலைக்காக அந்நிறுவனம் 399 அமெரிக்க டாலர் , இந்திய ரூபாயின் படி மாதத்திற்கு சுமார் ரூ .29,644 வரை சம்பளமாக கொடுக்க தயாராக உள்ளது என்று அந்த நிறுவனத்தின் வைஸின் மதர்போர்டு தெரிவித்துள்ளது.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளாக லைவ் ஐ கண்காணிப்பு நிறுவனம் கூறுவதாவது, இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர் 12 ஆம் வகுப்பு முடித்தவராக அல்லது அதற்கு மேல் படித்திருப்பவராக இருக்கலாம். மேலும் இந்த வேலை முழுக்க முழுக்க கணினியை கொண்டே செயல்படுவதால் கணினி பற்றிய அடிப்படை திறன்கள் உள்ளவராக இருக்க வேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.