முக்கியச் செய்திகள் இந்தியா

மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதிஒதுக்கீடு!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மாநிலங்களுக்கு சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பேரிடர் நிவாரண நிதியை விடுவித்தது மத்திய அரசு.

கொரோனா கால சிறப்பு நிவாரணமாக, மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. இதனை அடுத்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முதல் தவணையாக 8 ஆயிரத்து 873 கோடி ரூபாயை விடுவித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் 50 சதவீத தொகையான நான்காயிரத்து 436 கோடியை மாநில அரசுகள் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் நிவாரண நிதி என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் வழங்கப்படும் நிலையில், இவ்வாண்டு கொரோனா 2ம் அலையை கருத்தில் கொண்டு முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் யார்? – இன்று தேர்தல்

EZHILARASAN D

தி.மு.க ஆட்சியை எதிர்ப்பவர்கள் புகழ்கிற சூழ்நிலை விரைவில் வரும்: அமைச்சர் சேகர் பாபு

Halley Karthik

பழைய ஓய்வூதிய திட்ட அறிக்கை பரிசீலனையில் உள்ளது!