முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – செந்தில் தொண்டமான், வி.கே.சசிகலா காளைகள் வெற்றி!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோரின் காளைகள் வெற்றி பெற்றுள்ளன.

பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3 வது ஜல்லிக்கட்டாக அலங்கால்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  இன்று அதிகாலை 6:00 மணி முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்களின் மருத்துவ பரிசோதனை துவங்கியது.

இந்த மருத்துவ பரிசோதனையில் மாடுபிடி வீரர்களை 130 மேற்பட்ட மருத்துவ குழுவினர் மருத்துவர் செவிலியர் உதவியாளர் என அனைவரும் பரிசோதனை செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்  ஆன்லைன் மூலமாக 1784 பதிவுற்ற நிலையில் அதில் ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 800 மாடுபிடி வீரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவருமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டனர்.

தகுதி அடிப்படையில் அனைத்து மாடுபிடி வீரர்களும் ஐம்பது பேர் கொண்ட குழுவாக சுமார் 10 சுற்றுகள் நடைபெறும் போட்டியில் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள்.

இதில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு முதல் பரிசு கார், பைக் மற்றும் பீரோ,  கட்டில் டிவி, சைக்கிள், தங்க காசு போன்ற பரிசுகள் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா குழுவினரால் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளருக்கு வழங்கப்படும்.

இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வீரர்களின் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது.  போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  முதல் இரண்டு சுற்றுகளில் சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க முடியாமல் வீரர்கள் திணறினர்.  முதல் சுற்று முடிவில் 17 காளைகளில் ஒரே ஒரு காளையை மட்டுமே வீரர் அடக்கினார்.

இரண்டாம் சுற்று முடிவில் சிவகங்கையைச் சேர்ந்த அபிசித்தர் 8 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார்.  மேலும் பல பிரபலங்களில் காளைகளும் வெற்றி பெற்றுள்ளன.

பிரபலங்களின் காளை :

  • இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டைமான் 3 காளைகளும் வெற்றி பெற்றன
  • வி.கே.சசிகலா பெயரில் அவிழ்க்கப்பட்ட காளையும் வெற்றி பெற்றது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 3.44 கோடி அபராதம் வசூல்

G SaravanaKumar

சென்னை அருகே 1000 ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு!

Web Editor

தலிபான்களிடம் சரணடைந்த பஞ்ச்ஷிர் போராளிகள்

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading