மொத்த மாணவர் சேர்க்கை 50%-க்கும் குறைவாக உள்ள கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதியில்லை என AICTE அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 220 பொறியியல் கல்லூரிகள், வரும் கல்வியாண்டில் புதிய பாடப்பிரிவுகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 50% மாணவர்களை விட குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள 220 பொறியியல் கல்லூரிகள், AI, ML உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்ய AICTE அனுமதி மறுத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், சைபர் பாதுகாப்பு, IoT, தரவு அறிவியல் உள்ளிட்ட புதிய பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதால் Mechanical, Civil உள்ளிட்ட பாரம்பரிய பிரிவுகளைக் கொண்டு இயங்கும் கல்லூரிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.







