நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி வாகை சூடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளார் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி தென்கரை பகுதியில் எட்வேர்ட் நடுநிலைப்பள்ளியில் அதிமுக ஒருங்கிணைப்பாளார் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வாக்களித்தார். அவரைத்தொடர்ந்து அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய திமுக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று கூறினார்.
மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தற்போதைய அரசு முடக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் அதிமுக வெற்றி வாகை சூடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல, திண்டிவனம் ரொட்டிகார தெருவிலுள்ள 20-வது வாக்குச்சாவடி மையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் மற்றும் நிதி ஆதாரத்தினை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முக்கியமானது என்று குறிப்பிட்ட ராமதாஸ், இத்தேர்தலில் பாமக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறினார். மேலும், தமிழ்நாட்டில் நிலவும் பணப்பட்டுவாடா புகார் குறித்து பேசிய அவர், எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.