அதிமுகவிற்கு எந்த மாவட்டத்திலும் தலைமை கிடையாது என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விமர்சனம் செய்துள்ளார்..
மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாடு மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதிமுகவுக்கு எந்த மாவட்டத்திலும் தலைமை கிடையாது என்றும், திராவிட இயக்கத்திற்கு ஒரே தலைமை மு.க.ஸ்டாலின் தான் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், கொரோனா நான்காம் அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தெளிவாக இருப்பதோடு, முதல்வர் உறுதியாகவும் இருக்கிறார்.
நம் உரிமையை நிச்சயம் விட்டுக்கொடுக்க மாட்டார். அண்டை மாநிலங்களோடு நல்ல உறவு கொண்டு நதி நீர் விவகாரத்தில் கூடுதல் பங்கீட்டை பெற நடவடிக்கை எடுப்பார் என்றார்.மேலும், நகைக்கடன் தள்ளுபடி எல்லா இடங்களிலும் கொடுக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்து கொண்டு செயலாற்றி வருகிறார் என்ற தெரித்த அவர், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நியாய விலைக்கடைகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதோடு, தமிழக மாணவர்களை மீட்க முழு மூச்சுடன் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.








