அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் பலியானதை அடுத்து அதிமுகவை சேர்ந்த சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் கோபிநாத் ஆகிய இருவரைக் கைது செய்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக சார்பில் 100 அடி கொடிக்கம்பம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அதிமுக இடைக்காலத்துச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் கல்வெட்டை துறந்து கொடி
ஏற்றி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கொடி கம்பம் பழுதின் காரணமாக நேற்று மாலை மதுராந்தகம் அதிமுக நிர்வாகி சரவணன் தலைமையில் கிரேன் மூலம் கீழே இறக்கி பழுது
நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் சரிந்து விழுந்து அருகிலிருந்த மதுராந்தகம் சூரக்கோட்டை பகுதியை சேர்ந்த செல்லப்பா என்பவர் மீது விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.
மதுராந்தகம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிய நிலையில் மதுராந்தகம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இறந்த செல்லப்பாவின் மனைவி ஜெகதாம்பாள் காவல் நிலையத்தில் சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் மீது புகார் அளித்ததின் அடிப்படையில் மதுராந்தகம் காவல்துறையினர் சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் கோபிநாத்தை கைது செய்து நீதிமன்றம் முன்பு நிறுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் கோபிநாத் கவன குறைவு மூலமாகவே இந்த மரணம் ஏற்பட்டுள்ளது என மதுராந்தகம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.







