33.6 C
Chennai
May 29, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

வீடற்ற ஏழைகள் தீபாவளி கொண்டாட பணம் அளித்த ஆப்கன் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ்!

ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ், நள்ளிரவில் அஹமதாபாத்தில் வீடற்ற ஏழை மக்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பணம் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அற்புதமாக செயல்பட்டது. பல சாம்பியன் அணிகளை ஒன்றன் பின் ஒன்றாக தோற்கடித்து, தற்போது எந்த அணியையும் தோற்கடிக்கும் திறமையை வெளிப்படுத்தி உள்ளது. முதல்முறையாக அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இடம்பெறவில்லை என்றாலும், பட்டியலில் ஆறாவது இடத்தைப் தக்கவைத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்திய பார்வையாளர்களின் ஆதரவு அதிகம் இருந்தது. அதே நேரத்தில், ஆப்கானிஸ்தான் வீரர்களும் இந்திய மக்களுக்கு மிகுந்த அன்பைக் காட்டினர்.

இந்நிலையில் நேற்றிரவு 3 மணியளவில் அகமதாபாத்தில் காணப்பட்ட இந்த காட்சி, ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ், அகமதாபாத் தெருக்களில் வசிக்கும் மக்களிடம் சென்று தீபாவளியை கொண்டாட பணம் கொடுத்துள்ளார். 

குர்பாஸ் தனது இந்த காரியத்திற்கு எந்த விளம்பரமும் செய்யவில்லை. அகமதாபாத் தெருக்களில் வசிக்கும் ஏழை மக்களிடம் இரவு மூன்று மணிக்கு தனியாகச் சென்றார். அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் விழித்திருந்தார். குர்பாஸ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஏழைகளின் அருகில் 500-500 நோட்டுகளை வைத்துவிட்டு, விழித்திருந்த பெண்ணின் கையில் பணத்தைக் கொடுத்துவிட்டு அமைதியாக காரில் கிளம்பினார்.

அதே நேரத்தில், ஒரு சாதாரண மனிதர், குர்பாஸை அடையாளம் கண்டு, அவர் பணத்தை விநியோகிப்பதைக் கண்டு, தூரத்தில் இருந்து வீடியோ எடுத்தார். குர்பாஸ் அங்கிருந்து கிளம்பியதும், ஏழை மக்கள் அருகே சென்று குர்பாஸ் தூங்கும் அனைவருக்கும் அடுத்த பணத்தை விநியோகித்ததைப் பார்த்தார். 

ரஹ்மானுல்லா குர்பாஸின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஹ்மானுல்லா குர்பாஸும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு மாதங்கள் இந்தியாவில் தங்கியிருப்பார். இவர் ஐபிஎல்-ல் முக்கியமான வீரர். அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.  எனவே குர்பாஸுக்கு அகமதாபாத்துடன் சிறப்பான உறவு உள்ளது. 

குர்பாஸ் செய்த இந்த செயல் காண்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading