ஆதித்ய கரிகாலன் காதல் தோல்வியால் போருக்கு போனான் என்று பொன்னியின் செல்வம் திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரம் பேசினார்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த படத்தின் 2ம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ‘பிஎஸ் ஆந்தம்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இதில், நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம், பொள்ளாச்சியில் சூட்டிங்கில் தான் தெரிந்து கொண்டேன் இட்லியில் 28 வகையும், தோசையில் 50 வகையும் இருக்கிறது என்று… நான் தற்போது டயட்டில் இருப்பாதல் பிரியாணி சாப்பிட கூப்பிட்ட பிறகும் போகவில்லை. கோவை மக்கள் எப்படி இவ்வளவு அழகா பேசுறீங்க, எப்படிங்க அழகா பேசிறீங்க. நானும் ட்ரை பன்றேன் முடியல என்றார்.
ஆதித்ய கரிகாலனை ஏற்று கொண்டதற்கு நன்றி. அது மணிசார்க்கு தான் போய் சேரும். ஆதித்யா வர்மா திரைப்படத்தில் காதல் தோல்வியால் பாருக்கு போனான். ஆதித்ய கரிகாலன் காதல் தோல்வியால் போருக்கு போறான். ஐ.எம் தி ஒரிஜினல் சூப் பாய் என்றார்.