உடல்நலக் குறைவால் காலமான நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மதுரையில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பம்மாள் உடல்நல குறைவால் காலமானார், 87 வயதான இவர் உடல்நல குறைவு காரணமாக 4 நாட்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் காலமானார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவருக்கு வடிவேலுவுடன் சேர்த்து 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் மொத்தம் 7 பிள்ளைகள் உள்ளனர். இவரது மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா தலைவர் ஜி.கே வாசன், வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்தனர்.
அரசு சார்பில் அமைச்சர் மூர்த்தி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி வடிவேலுவுக்கு ஆறுதல் தெரிவித்தனர். மதுரை விரகனூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அப்பகுதிவாசிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். விரகனூரில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சரோஜினியின் உடல் கீரைத் துறையில் உள்ள மின் மயானத்தில் வைத்து இறுதி சடங்குகளுக்கு பின் தகனம் செய்யப்பட்டது.