திரைப்பட நடிகர் ராஜ்கிரண் மகள் கணவருடன் முசிறி காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி பத்மஜோதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பத்மஜோதி தனது கணவரை விட்டு பிரிந்து மகள் பிரியாவுடன் சென்னைக்கு சென்றுள்ளார். அப்போது நடிகர் ராஜ்கிரணுடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவரை பத்மஜோதி இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜனத்பிரியா சின்னத்திரை நடிகர் முனீஸ்ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு நடிகர் ராஜ்கிரண் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பிறகு பிரியா தனது தந்தை இளங்கோவன் கொடுத்த நகைகளை தாயிடம் கேட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பத்மஜோதி என்கிற கதீஜா ராஜ்கிரண் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் தனது கணவர் நடிகர் ராஜ்கிரன் மீது அவதூறாக பேசியும், தனது குடும்ப நகையை எடுத்துச் சென்ற பிரியா குறித்து நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார். தற்போது பிரியா கணவருடன் துறையூரில் தந்தை வீட்டில் வசித்து வருவதால் இந்த புகார்மீது விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வர பெற்ற புகாரை முசிறி டிஎஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.
முசிறி டிஎஸ்பி யாஸ்மின், இன்ஸ்பெக்டர் காவேரி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜனத்பிரியா அவரது கணவர் முனீஸ்ராஜாவுடன் ஆஜராகி விளக்கம் அளித்தார். நடிகர் ராஜ்கிரன் மனைவி பத்மஜோதி என்கிற கத்திஜா ராஜ்கிரண் தரப்பினர் யாரும் ஆஜராகவில்லை. இதனால் விசாரணை மாலை ஒத்தி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜனத்பிரியா என்னை அவர்கள் வீட்டில் வேலைக்காரியாக தான் நடத்தினர். தற்போது நான் திருமணம் செய்து விட்டதால் அவர்களுக்கு கஷ்டமாக உள்ளது ஆகவே எனது மீது புகார் அளித்துள்ளனர். ராஜ்கிரண் நினைத்திருந்தால் இந்த புகார் வருவதை தவிர்த்திருக்கலாம் எங்களது நகைகளை எங்களுக்கு கொடுத்து விட்டு எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று கூறினார்.